வேதாகமும் ஜெபமும் கிறிஸ்தவ வாழ்வில் இரு துப்பாக்கிகள் என்றால் வேதம் நிறைந்த ஜெபம் என்பது இரட்டைக் குழல் துப்பாக்கி. இரட்டிப்பு வல்லமை கொண்ட ஆவிக்குறிய ஆயுதம். அப்படிப்பட்ட ஜெபங்களை ஏறெடுக்க வேதாகமமே உதவிசெய்கிறது - அப்படி, வேதத்தையே தங்கள் ஜெபமாக்கிய வேதகால தேவ தாசர்கள் உதவியுடன் நாம் நம் ஜெப வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு ஒரு கையேடாக இருக்கும். விசுவாச வாழ்வின் ஆரம்பநிலையில் இருந்தாலும், அனுபவமிக்க ஊழியராகவே இருந்தாலும் இந்தப் புத்தகம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்பது உறுதி. 122 பக்கங்களில் ஆழமான வழிகாட்டி.
ஆசிரியர் - பென்னி அலெக்ஸாண்டர், ஒரு மென்பொருள் நிறுவனம் நடத்திவருகிறார். அத்துடன் எழுத்தைத் தன் ஊழியமாகக் கொண்டவர்.
இதயம் கேட்கும் 21 கேள்விகள் என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார்.
முகனூல் பக்கம்: https://fb.com/alx.ben - இங்கு ஏராளமான சிறு மற்றும் குறுங்கட்டுரைகளை வாசிக்கலாம்.